108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கானஈரோட்டில் 9-ந்தேதி நடக்கிறது
- Posted on Sat Feb 5, 2022
- 720 Views
108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கானஈரோட்டில் 9-ந்தேதி நடக்கிறது
108 ஆம்புலன்ஸ் டிரைவருக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 9-ந் தேதி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள் யி ளது. 22 வயதுக்கு மேல் 35 வயதுக்குள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் கீ இருக்க வேண்டும். பி.எஸ்சி. டி.ஜி.என்.எம் நர்சிங் மற்றும் த பி.எஸ்சி. சுவாலஜி, பாட்னி, பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, கெமிஸ்ட்ரி அவற்றில் ஏதா வது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதுதவிர பிளஸ்- 2 முடித்தவுடன் ஏ.என்.எம். டி.எப்.டி.என், டி.என்.ஏ, டி.எம். எல்.டி அல்லது டி.பார்ம் படித்திருக்க வேண்டும். லகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.14 ஆயிரத்து 996 ஊதிய மாகவும் மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நியமிக்கப்படுவார்கள். 12 மணி நேர சுழற்சி முறையில் வேலை செய்ய வேண்டியிருக்கும். மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக நேரில் கொண்டு வர வேண்டும்.